• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

2019ம் ஆண்டிற்கான நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்ப பதிவு தொடக்கம்

November 1, 2018 தண்டோரா குழு

2019ம் ஆண்டிற்கான எம்பிபிஎஸ்,பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.

2019ம் ஆண்டிற்கான மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு மே 5ம் தேதி நடைபெறவுள்ளது.நீட் தேர்வை இதுவரை சி.பி.எஸ்.இ நடத்தி வந்த நிலையில்,இனிவரும் காலங்களில் NTA எனப்படும் தேசிய தேர்வு முகமை நடத்தவுள்ளது.இந்நிலையில்,2019ம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ்,பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.பிளஸ் டூ படிக்கும் அல்லது படித்து முடித்த மாணவர்கள் இன்று முதல் தேசிய தேர்வு முகமையின் www.nta.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

நவம்பர் 30ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.வழக்கம்போல் 10-க்கும் மேற்பட்ட மாநில மொழிகளிலும் வினாத்தாள் வழங்கப்படவுள்ளது.தேர்வு முடிவுகள் அடுத்த ஆண்டு ஜூன் 5ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க