• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2018ம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு !

October 3, 2018 தண்டோரா குழு

2018ம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி, ஆல்பிரட் நோபல் நினைவாக, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹாம் நகரில் 2018 ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மருத்துவம் மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில், வேதியியலுக்கான நோபல் பரிசு ஒரு பெண் உட்பட 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பிரான்சிஸ் ஹெச். அர்னால்ட், ஜார்ஜ் பி.ஸ்மித், பிரிட்டனை சேர்ந்த கிரிகோரி பி.விண்டர் ஆகியோருக்கு, மனித குலத்திற்கு உதவும் வகையில், புதிய வேதியியல் பொருட்களை கண்டுபிடித்ததற்காக இந்த விருது வழங்கப்பட உள்ளது.

மேலும் படிக்க