• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எல்லையில் ஊருடுவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுகொலை

January 12, 2017 தண்டோரா குழு

ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் கட்டுப்பாட்டு எல்லை வழியாக ஊருடுவ முயன்ற 2 தீவிரவாதிகளை இந்திய ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.

இச்சம்பவம் குறித்து இந்திய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் நிருபர்களிடம் புதன்கிழமை (ஜனவரி 11) கூறியதாவது:

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் இரண்டு தீவிரவாதிகள் ஊருடுவ முயன்றதை இந்திய ராணுவத்தினர் மீண்டும் முறியடித்துள்ளனர்.

பீடர் நாலா என்ற பகுதியில் 2 தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் ஊருடுவ முயன்றனர். அதை, ராணுவத்தினர் சரியான நேரத்தில் பார்த்து துப்பாக்கியால் சுட்டதில் இரு தீவிரவாதிகளும் உயிரிழந்தனர்.

அவர்களுடைய உடல்கள், ஆயுதங்கள் எல்லைக் கட்டுப்பாட்டு இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் தீவிரவாதிகள் ஊருடுவ உடந்தையாக இருந்து அவர்களுக்கு ஆதரவு அளிக்க பாகிஸ்தான் தவறியதில்லை.

ஜனவரி 9ம் தேதி அக்னூர் பகுதி பட்டால் கிராமத்தில் உள்ள பொது ரிசர்வ் பொறியியல் படை முகாம் (GREF) மீது நடத்திய தாகுதலில் 3 கூலி தொழிலார்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

எல்லையில் உள்ள இந்திய ராணுவத்தினர் அதிக விழிப்போடு இருக்கின்றனர். பாகிஸ்தான் ஆதரிக்கும் தீவிரவாத இயக்கத்தை அடியோடு அழிக்க தயாராக உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க