• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

2,௦௦௦ ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரம் கண்டுப்பிடிப்பு

January 9, 2017 தண்டோரா குழு

2,௦௦௦ ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரத்தை சீன தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து சீன ஆராய்ச்சியாளர் ஒருவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக் கிழமை(ஜனவரி 8) கூறியதாவது:

சீன நாட்டின் வடகிழக்கு மாநிலமான லியோனிங் மாநிலத்தில் 2,௦௦௦ ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரத்தைக் கண்டுபிடித்துள்ளோம். கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் சீனாவின் ஹன்னான் மாவட்டத்தின் ஷேன்யாங் பகுதியில் உள்ள க்வின்ஷுவாங்ஸி நகரில் இந்த ஆராய்ச்சியைக் கடந்த ஆண்டு ஜூலையில் தொடங்கினோம்.

இதுவரை 5௦௦ சதுர மீட்டர் வரை தோண்டப்பட்டுள்ளது. எங்களுடைய தீவிர ஆராய்ச்சிக்கு உட்படுத்த இடத்தில் எஞ்சியுள்ள வீடுகள், சேமிப்பு கிடங்குகள், சாம்பல் குழிகள் மற்றும் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதனுடன், மண்பாண்டங்கள், வெண்கலம் மற்றும் இரும்பு பொருள்கள், ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. கிங்க் சுயங்சி நகர் வெண்கல காலம் முதல் ஹான் வம்சம் வரை (கிமு 2௦2 முதல் கிபி 22௦ வரை) நீண்ட வரலாறு கொண்ட இடம். இந்தப் பகுதியில் கடந்த 2௦௦௦ ஆண்டுகளாக தொடர்ச்சியாக மனிதர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க