• Download mobile app
04 Apr 2026, SaturdayEdition - 3706
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

18 மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ள பில் வழங்க கோரிக்கை

October 17, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின் 2021-2022ம் ஆண்டிற்கான பொது குழு கூட்டம் கோவையில் நடந்தது. இதில் சங்கத்தின் தலைவர் உதயகுமார், பொது செயலாளர் சந்திர பிரகாஷ், பொருளாளர் அம்மாசையப்பன், துணை செயலாளர் மைக்கேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மரணம் அடைந்த சங்க உறுப்பினர்கள் மாரப்பன், முருகேசன், மயில்வாணன் ஆகியோருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. சங்க உறுப்பினர்கள் இன்சூரன்ஸ் திட்டத்தின் மூலமாக மயில்வாணன் குடும்பத்தினருக்கு பத்து லட்ச ரூபாய் இன்சூரன்ஸ் தொகை வழங்கப்பட்டது.

கோவை மாநகராட்சியில் 18 மாதங்களுக்கு மேல் நிலுவையில் உள்ள திட்டப் பணிகளுக்கான பில் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும், கடந்த 6 ஆண்டு காலத்திற்கு மேலாக நிலுவையில் உள்ள 5 சதவீதம் பில்களில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக கோவை மாநகராட்சி கமிஷனரை சந்தித்து வலியுறுத்த இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

மேலும் படிக்க