• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

18 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள்

January 20, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டம் தேவராயபுரம் ஊராட்சி வெள்ளருக்கம்பாளையத்தில் 18 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் மற்றும் 6 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.90 ஆயிரம் மதிப்பிலான சுழல் நிதியினை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து தேவராயபுரம் ஊராட்சியில் ரூ.38.80 லட்சம் மதிப்பில் பரமேஸ்வரன்பாளையம் முதல் குப்பேபாளையம் வரை சாலை மேம்பாடு செய்யும் பணி, ரூ.44 லட்சம் மதிப்பில் சிறுவாணி சர்வீஸ் சாலை முதல் சின்னசாமி தோட்டம் வரை சாலை மேம்பாடு செய்யும் பணி, ரூ.15 லட்சம் மதிப்பில் நரசீபுரம் சாலை முதல் பந்திபள்ளம் பொன்னுச்சாமி தோட்டம் வரை சாலை மேம்பாடு செய்யும் பணி, ரூ.10 லட்சம் மதிப்பில் புள்ளாக்கவுண்டன்புதூரில் உள்ள சமுதாய நலக்கூடத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, புள்ளாக்கவுண்டன் புதூரில் ரூ.33.70 லட்சம் மதிப்பில் மயானம் முதல் சின்னசாமி தோட்டம் – பெரும்பள்ளம் வரை சாலை மேம்பாடு செய்யும் பணி என மொத்தம் ரூ. 3.04 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளாச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம்(மகளிர் திட்டம்) திட்ட இயக்குநர் செல்வராசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க