• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

17 ஆண்டுகளுக்கு பின் உலக அழகியாக இந்திய பெண் தேர்வு

November 18, 2017 தண்டோரா குழு

2017ஆம் ஆண்டின் உலக அழகியாக இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் மனுஷி சில்லார்(20), மருத்துவப் பட்டப் படிப்பை பயின்று வருகிறார். 2017ஆம் ஆண்டின் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் சீனாவின் சன்யா சிட்டி அரினாவில் 118 நாடுகள் பங்கேற்ற மிஸ் வோல்டு அழகிப் போட்டியில் கலந்து கொண்டார். இப்போட்டியில்,வென்று உலக அழகியாக தேர்வு செய்யபட்டுள்ளார். இதன் மூலம் 17 ஆண்டுகளுக்கு பின் இந்தியர் ஒருவர் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.வெற்றி பெற்ற மனுஷி சில்லாருக்கு 2016ஆம் ஆண்டு மிஸ் வோல்டு பட்டம் வென்ற போர்டா ரிகாவின் ஸ்டீபனி டெல் வல்லே, மகுடம் சூட்டி கௌரவித்தார்.

கடந்த 1966ஆம் ஆண்டு வரை எந்தவொரு ஆசியப் பெண்ணும், மிஸ் வோல்டு பட்டம் வென்றதில்லை. இந்நிலையில் அதே ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ மாணவி ரெய்தா ஃபரியா பட்டம் வென்று,புதிய வரலாறு படைத்தார். அதன்பிறகு இந்தியாவின் தலையெழுத்தே மாறியது. 30 ஆண்டுகள் கழித்து, ஐஸ்வர்யா ராய் மிஸ் வோல்டு பட்டம் வென்றார். இவரைத் தொடர்ந்து பிரியங்கா சோப்ரா, டயனா ஹைடன் உள்ளிட்டோர் உருவாகினர்.

தற்போது இவர்களது வரிசையில் 67வது மிஸ் வோல்டு பட்டத்தை வென்று மனுஷி சில்லார் சாதித்துள்ளார்.

மேலும் படிக்க