• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

15 தீவிரவாதிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம்

March 4, 2017 தண்டோரா குழு

ஜோர்டான்: ஜோர்டான் நாட்டில் தீவிரவாத தாக்குதலில் ஈடுப்பட்ட 15 குற்றவாளிகளுக்கு சனிக்கிழமை (மார்ச் 4) காலையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இவர்கள் அனைவரும் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்தவர்கள். ஜோர்டான் நாட்டின் தலைநகரான அம்மானின் தெற்குப் பகுதியில் உள்ள சூஆகா சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டனர்.

ஜோர்டான் நாட்டின் தகவல் அமைச்சர், மகுமுத் அல்-மொமணி கூறுகையில், “மரண வரிசையில் இருந்த 15 தீவிரவாதிகளுக்கு சனிக்கிழமை காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2௦௦6ம் ஆண்டு முதல் 2௦14ம் ஆண்டு வரை மரண தண்டனை விதிப்பதில் கால இடைவெளி அதிகமாக இருந்தது. 1௦ குற்றவாளிகள் தீவிரவாதச் செயலைகளில் ஈடுபட்டதற்காகவும், 5 பேர் கற்பழிப்பு உள்ளிட்ட மற்ற குற்றங்களைச் செய்ததற்காகவும் தூக்கிலிடப்பட்டனர்” என்றார்.

மேலும் படிக்க