May 23, 2018
தண்டோரா குழு
தூத்துக்குடியில் 144 தடை உத்தரவை மீறியதாக கமல்ஹாசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று நேரில் சந்தித்த ஆறுதல் கூறினார்.அவர்களிடம் ஆறுதல் கூறி பேசிய கமல், அவர்களின் துயரங்களை கேட்டறிந்து கண்கலங்கினார்.
இந்நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 பேருக்கு மேல் மருத்துவமனைக்கு செல்ல கூடாது என்ற நிலையில் கமல் 20 பேருடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.