• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

12மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை நிகழ்த்திய 5வயது சிறுவன்..! குவியும் பாராட்டு…!

March 13, 2022 தண்டோரா குழு

கோவையில் 5 வயது சிறுவன் 12 மண் பானைகள் மீது நடந்தபடி 12 மணி நேரம் தொடர்ந்து இரட்டை சிலம்பம் சுற்றி சாதனைப்படைத்துள்ளார்.

கோவை சரவனம்பட்டி பகுதியை சேர்ந்த அருண்குமார்,காவியா தம்பதியரின் 5வயது மகன் சஞ்சீவ்.இவர் சிறு வயதில் இருந்து சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள முல்லை தற்காப்பு மற்றும் விளையாட்டு கழகத்தில் சிலம்பம் அடிமுறை கலைகளை ஆர்வாகமாக கற்று வந்துள்ளார்.

இந்நிலையில் கோவை கணபதி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் சிறுவன் சஞ்சீவ் 12 மண் பானைகள் மீது நடந்தபடி தொடர்ந்து 12மணி நேரம் இரட்டை சிலம்பம் சுற்றி சாதனையை நிகழ்த்தியுள்ளார்.இவரது இந்த சாதனை நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. தொடர்ந்து சிறுவன் சஞ்சீவை பாராட்டி வெற்றி பதக்கங்கள் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க