June 3, 2025
தண்டோரா குழு
கோவை க.க சாவடியில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயண குரு கல்லூரி, பல்கலைக்கழக மானிய குழுவிடமிருந்து பத்து ஆண்டு காலத்திற்கு தன்னாட்சி உரிமை பெற்றுள்ளது.
ஸ்ரீ நாராயணகுரு கல்லூரி1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு கல்விச் சேவையில் 30 ஆண்டுகளைக் கடந்துள்ளது.தரமான கல்வியை வழங்கி வரும் நிறுவனத்திற்கு இது ஒரு சிறந்த சாதனையாகும்.ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள்,கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள்,அலுவலகப் பணியாளர்கள், மற்றும் மாணவர்கள் அனைவரும் தன்னாட்சி உரிமை பெற்றதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றனர்.