• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

11.44 லட்சம் பான் எண்கள் ரத்து – மத்திய நிதித்துறை இணையமைச்சர் தகவல்

August 2, 2017 தண்டோரா குழு

ஜூலை 27 ம் தேதி கணக்கீட்டின்படி 11.44 லட்சம் பான் எண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ராஜ்யசபாவில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார் தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார்,

ஒரே நபருக்கு பல பான் எண்கள் வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த ஜூலை 27ம் தேதி வரை கிட்டத்தட்ட 11 லட்சத்து 44 ஆயிரத்து 211 பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் எண்கள் வைத்திருந்ததை கண்டறிந்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 2004 முதல் 2007 வரை 1566 போலி பான் கார்டுகள்,போலி பெயர் மற்றும் அடையாள சான்றுகள் கொடுத்து பெறப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது. என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க