• Download mobile app
09 Feb 2026, MondayEdition - 3652
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

11 மாதங்களுக்கு பிறகு நேரடியாக 26ம் தேதி விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம்

February 24, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரும் 26ம் தேதி விவசாயிகள் முறையீட்டு கூட்டம் நடைபெறும் என மாவட்ட கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.

இம்மாதத்திற்கான கோவை மாவட்ட விவசாயிகள் முறையீட்டுக்கூட்டம் நாளை மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முதன்மை கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கோவை மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான பிரச்னைகளுக்கு மனுக்கள் அளிக்கலாம்.

கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 24ம் தேதி முதல் விவசாயிகள் முறையீட்டுக்கூட்டம் நடைபெறாமல் இருந்தது. அதன் பின் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இணையதளம் மூலம் விவசாயிகள் முறையீட்டு கூட்டம் நடைபெற்றது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனிடையே 11 மாதங்களுக்கு பிறகு விவசாயிகள் முறையீட்டு கூட்டம் நேரடியாக மீண்டும் நடைபெற உள்ளது.

மேலும் படிக்க