• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

100 நாள் வேலைக்கு ஆதார் எண் கட்டாயம்

January 9, 2017 தண்டோரா குழு

100 நாள் வேலை உறுதித் திட்டத்திற்கு வரும் ஏப்ரல் மாதம் முதல் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

“மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றுவதற்கு ஏப்ரல் 1 முதல் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது .

புதிதாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்திருப்பவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட 12 இலக்க அடையாள எண் அல்லது தற்போது பயன்படுத்தி வரும் வேறு வகையான அரசு அடையாள அட்டைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்” எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

“மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட பலன்களைப் பெற வேண்டுமெனில் ஆதார் அடையாள அட்டைகளைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அடையாள அட்டை இல்லதாவர்கள், அதைப் பெறும் வரை ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, விவசாயிகள் வங்கி சேமிப்புப் புத்தகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அடையாளச் சான்றாகக் காண்பிக்கலாம்.

பொதுமக்கள் சிரமமின்றி ஆதார் அடையாள அட்டை பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன” என மத்திய தலைமைச் செயலகம் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க