• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

100 நாள் திட்டத்தை மேம்படுத்த மத்திய அரசு ஆராயும் – வானதி சீனிவாசன் பேட்டி

October 6, 2021 தண்டோரா குழு

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் ஆட்சியர் அலுவலகத்தில் தொகுதி தொடர்பான கோரிக்கைகள் குறித்து மனு அளித்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

முதியோர் உதவி தொகை கிடைக்க பெறாதவர்களுக்கு உடனடியாக கிடைக்க பெற நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டும். பாஜக ஆட்சியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் சம்பளம் உயர்த்தபட்டது. இத்திட்டத்தை விவசாய மக்களோடு இணைந்து செயல்படுத்த வேண்டும். இதனை மேலும் மேம்படுத்த மத்திய அரசு ஆராயும்.

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் விவசாயிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அம்மாநிலத்தின் முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார். அது பாரபட்சமற்ற நடவடிக்கையாக இருக்கும். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய நிலை அம்மாநில அரசிற்கு உள்ளது. சூழலின் தன்மையை கருதியே காங்கிரஸ் தேசிய பொது செயலாளர் பிரியங்கா காந்தி அனுமதிக்கபடவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை அடுத்து கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கராவிடமும் தெற்கு தொகுதி தொடர்பான கோரிக்கைகள் குறித்த மனுக்களை வானதி சீனிவாசன் அளித்தார்.

மேலும் படிக்க