• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு ராட்சத பலூனை பறக்கவிட்டார் மாநகராட்சி கமிஷனர்

March 20, 2021 தண்டோரா குழு

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தில் தேர்தல் அதிகாரியாக ஆட்சியர் ராஜாமணி நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக தேர்தலில் வாக்களிப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட காந்திபுரம் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்கு அளிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ராட்சத பலூனை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் பறக்கவிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய மண்டல உதவி கமிஷனர் மகேஷ்கனகராஜ், உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி, மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க