• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

10 ரூபாய் சிகரெட் விவகாரம்: கோவையில் கடை உரிமையாளரை மது பாட்டிலால் தாக்கிய நபர்

October 11, 2021 தண்டோரா குழு

கோவை வெள்ளலூர் பகுதியில் பெட்டி கடை நடத்தி வருபவர் செந்தில்குமார்.இவர் கடை அருகே குடியிருந்து வரும் ஆகாஷ் என்பவர் மது போதையில் வந்து பத்து ரூபாய் சிகரெட் வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் போனதால் செந்தில்குமார் அவரை சத்தம் போட்டு காசு கொடுத்து விட்டு செல்லுமாறு கூறியுள்ளார் இதில் கோபம் அடைந்த ஆகாஷ் 10 நிமிடம் கழித்து மது பாட்டிலை உடைத்து செந்தில்குமாரை தாக்கியுள்ளார்.

இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.காயமடைந்த செந்தில் குமாரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர் ஆகாஷ்க்கும் காயம் உள்ளதால் அவரரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

பத்து ரூபாய் சிகரெட்டிற்கு பத்து ரூபாய் சிகரெட்டிற்க்காக மதுபோதையில் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க