• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹோலி பண்டிகையொட்டி எர்ணாகுளம் – பரௌனி இடையே வாராந்திர சிறப்பு ரயில்

March 3, 2022 தண்டோரா குழு

கோவை வழித்தடத்தில் கேரள மாநிலம் எர்ணாகுளம் – பிகார் மாநிலம் பரௌனி இடையே கோடை கால வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:

எர்ணாகுளம் நிலையத்தில் இருந்து மார்ச் 4,11,18 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் இரவு 11.30 மணிக்கு புறப்படும் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் பரௌனி ரயில் நிலையத்தை சென்றடையும்.

அதேபோல், பரௌனி நிலையத்தில் இருந்து மார்ச் 8,15,22,29 மற்றும் ஏப்ரல் 5 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் மாலை 4.30 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் வியாழக்கிழமைகளில் பிற்பகல் 2.30 மணிக்கு எர்ணாகுளம் நிலையத்தை சென்றடையும்.

இந்த சிறப்பு ரயிலானது, ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, ரேணிகுண்டா, நெல்லூர், விஜயவாடா, ஏலூரு, ராஜமுந்திரி, சாமல்கோட், விசாகப்பட்டணம், ஸ்ரீகாகுளம் சாலை, பாலசா, பெர்ஹாம்பூர், புவனேஷ்வர், கட்டாக், காரக்பூர், துர்காபூர், ஆசன்சோல், சித்தரஞ்சன், மதுபூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க