• Download mobile app
07 Sep 2025, SundayEdition - 3497
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் இரத்த தான முகாம்

August 2, 2023 தண்டோரா குழு

ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் இன்று காலை 10
NSS, பன்னாட்டு வணிகத்துறை இணைந்து சாந்தி சோஷியல் சர்வீசஸுடன் யூனிட்டி லீட்ஸ் (unity leads) தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இரத்ததான முகாம் நடைபெற்றது.

இதில் கல்லூரி மாணவ,மாணவியர், பேராசிரியர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தார்கள்.125 பேர் குருதிக்கொடை வழங்கினார்கள். யோகாவில் பல்வேறு சாதனைகள் படைத்தவரும் இரத்த தானத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றி வரும், யூனிட்டி லீட்ஸ் தலைவருமான ரிஷி யோகா மாஸ்டர் சதீஷ்குமார் 34வது முறையாக இரத்த தானம் செய்தார்.

மாணவ மாணவியருக்கு யோகா பயிற்சியும் விழிப்புணர்வு வழங்கியதுடன் இரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி விளக்கமளித்தார்.6 மாதங்களுக்கு ஒரு முறை இரத்த தானம் செய்து முகம் தெரியாத பல உயிர்களை நம்மால் காப்பாற்ற முடியும் என்று வலியுறுத்தினார். கல்லூரி முதல்வர் துணைத்தலைவர் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை நாம் எப்போதும் நாம் நன்றாக இருந்தால் நம் நாடும் மேலும் வலிமை பெறும் என்றும் கூறினார்.

மேலும் படிக்க