• Download mobile app
13 Feb 2026, FridayEdition - 3656
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹிஜாப் விகாரத்தில் கர்நாடக நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்பை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

March 15, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தின் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) சார்பில் கர்நாடகா கல்லூரி வளாகங்களில் ஹிஜாப் அணிந்து செல்ல தடைவிதித்த கர்நாடக நீதிமன்றத்தின் ஒருதலைபட்சமான தீர்ப்பை திரும்பப்பெற வலியுறுத்தி மாணவர்கள் இன்று மாலை ஆத்துப்பாலம் சந்திப்பில் வைத்து ஆர்பாட்டம் நடத்தினர்.

இந்நிகழ்வில் SIOவின் மாநில செயலாளர் பஷீர் கண்டன உரையாற்றினார். அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தியும், ஹிஜாப் என்னும் பெயரை சொல்லி பெண்கல்வியை பறிக்கும் முயற்சியை கைவிடவேண்டும் என்றும், மத சுதந்திரத்தை ஒடுக்குகின்ற அநியாய தீர்ப்புகளை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என கோஷமிட்டும் மாணவர்கள் தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்தனர்.

மேலும் படிக்க