• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்ரீ நகர் மற்றும் சிவராம் நகர் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றாதாதால் நோய் தொற்று பரவும் அபாயம்

October 28, 2021 தண்டோரா குழு

கோவை சுங்கம் பைபாஸ் ஸ்ரீ நகர் மற்றும் சிவராம் நகர் குடியிருப்பு பகுதியில் நீண்ட நாட்களாக தேங்கியுள்ள குப்பைகளை அகற்றாதாதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகராட்சி 74 வது வார்டுக்கு உட்பட்ட சுங்கம் பைபாஸ் சாலை,ஸ்ரீ நகர்,சிவராம் நகர் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இங்கு போதிய அடிப்படை வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், துப்புரவு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததால், ஆங்காங்கே சாலையில் குப்பை குவியலாக காட்சியளிக்கிறது.

இதனால், இப்பகுதி மக்கள் சுகாதார கேட்டில் தவித்து வருகின்றனர். குப்பைகள் தேங்கியுள்ளதால், அந்த வழியாக மக்கள் செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் சரிவர குப்பை அகற்றப்படாததால், அங்கு விஷ பூச்சிகள்,பாம்புகள் போன்றவற்றின் கூடாரமாக மாறி வருவதாக இப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து பல முறை மாநாகராட்சி அதிகாரிகளிடம் இது குறித்து புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை எனவும் புகார் நெரிவித்தள்ளனர்.

மேலும் படிக்க