• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீ உத்தண்டராயர் திருக்கோவில்கள் மகா கும்பாபிஷேக விழா

June 2, 2022 தண்டோரா குழு

கோவையை அடுத்த பனப்பட்டியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ கணபதி ஸ்ரீ உத்தண்ட ராக்கியண்ணன் ஸ்ரீ உத்தண்டராயர் திருக்கோவில்கள் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், பனப்பட்டி கிராமத்தில் எம்மே குலம் மற்றும் சக்கியகுல குலதெய்வங்களாகிய அருள்மிகு ஸ்ரீ செல்வ கணபதி ஸ்ரீ உத்தண்ட ராக்கியண்ணன் ஸ்ரீ உத்தண்டராயர் திருக்கோவில்கள் கும்பாபிஷேக விழாகடந்த 16 ந்தேதி முகூர்த்தகால் நடுதலுடன் விழா துவங்கியது.

தொடர்ந்து விழாவில்,பாலாலயம் முளைப்பாரி இடுதல் கணபதி ஹோமம், சுதர்ஷன ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம். கிராம சாந்தி ,நிலத்தேவர் வழிபாடு , புனித மண் எடுத்தல், முளைபாலிகை இடுதல் . கலசங்களில் புனித நதிகளின் புனித நீர் கொண்டு வரப்பட்டு கலசங்கள் மற்றும் முனைப்பாரி விநாயகர் கோவிலில் இருந்து முக்கிய வீதிகளில் உலா வந்து, அருள்மிகு ஸ்ரீ செல்வ கணபதி, ஸ்ரீ உத்தண்ட ராக்கியண்ணன், ஸ்ரீ உத்தண்டராயர் திருக்குட நன்னீராட்டு ,விழா நடைபெற்றது.

பின்னர் கோவில் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது.பின்னர் சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் வேலுச்சாமி மற்றும் எம்மே குலத்தார்,சக்கி குலத்தார் மற்றும் விழா கமிட்டியினர் உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து செய்தருந்தனர்.

மேலும் படிக்க