• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்மார்ட் சிட்டி பணிகளில் ஏதேனும் எதிர்ப்புகள் இருப்பின் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் – மாநகராட்சி ஆணையர்

April 24, 2021 தண்டோரா குழு

கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அரங்கில் பொதுமக்களுடம் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.

அப்போது பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள குறைகளை மாநகராட்சி ஆணையரிடம் தெரிவித்தனர்.அப்போது குறைகள் அனைத்தும் கூடிய விரையில் சரி செய்து தரப்படும் என்று கூறினார்.

மேலும் பொதுமக்களிடம் பேசிய அவர்,

கோவை நகரம் தான் மற்ற நகரங்களை காட்டிலும் தனி மனித வருமானம், வரி வசூலில் ஒரு படி மேலுள்ளது.ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து எதிர்ப்புகள் மாற்று கருத்துக்கள் ஏதேனும் இருந்தால் மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வராமல் சமூக வலைதளங்களில் தெரிவிப்பது இங்கு பணிபுரிவொருக்கு மன உளைச்சலை தருவதாகவும் இந்த செயலை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டார்.

மேலும் பணிகள் நிறைவந்ததும் முன்பு இருந்ததை விட இப்பகுதி பசுமையாக காணப்படும் என்றும் கூறினார். இனி மாதந்தோறும் மாநகராட்சி அதிகாரிகள் மக்களை சந்தித்து கருத்து கேட்பர் என்றும் கூறினார்.

மேலும் படிக்க