• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை வாலாங்குளம் கரையில் சிற்றுண்டி கடை அமைக்கும் பணி

November 16, 2019 தண்டோரா குழு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை வாலாங்குளம் கரையில் சிற்றுண்டி கடை அமைக்கப்பட்டு வருகிறது.

கோவை மாநகரம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன அதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள குளங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், செல்வபுரம் ஆகிய குறைகளை பயன்படுத்தப்பட்டு பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி கோவை வாலாங்குளம் குளக்கரையில் நடைபாதை பொதுமக்கள் உட்காரும் வகையில் பார்வை கூடங்கள் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்றன. வாலாங்குளம் குளக்கரை ஒட்டியுள்ள பைபாஸ் சாலையில் விரைவில் சீரமைக்கப்பட உள்ளது.

தற்போது உக்கடம் பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள பாலத்தின் கீழ் பகுதியில் பொதுமக்கள் உட்கார்ந்து சாப்பிடுவதற்கான மேஜை நாற்காலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரி கூறும்போது,

வாலாங்குளம் மேம்பாலத்தின் நடுவில் ரயில் தண்டவாளம் உள்ளது .அந்தப் பாதையின் இருபுறமும் பாலக்கரை ஒட்டி அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேம்பாலத்தின் ஒருபுறம் சிற்றுண்டி கடைகள் ஓட்டல்கள் மறுபுறம் சிறுவர்கள் விளையாடுவதற்கான உபகரணங்கள் நிறுவப்படும். மேலும் மேம்பாலத்தின் கீழ் பகுதி பல்வேறு நிறங்களில் பெயிண்ட் அடிக்கப்படும் உள்ளது. அதன்படி குளக்கரை மற்றும் மேம்பாலம் புதிய பொலிவுடன் தோற்றமளிக்கும் இந்த பணிகள் மூன்று மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

மேலும் படிக்க