• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த உலகின் பழமையான மனிதர் மறைவு

January 31, 2018 தண்டோரா குழு

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த உலகின் பழமையான மனிதர்  தனது 113வது வயதில் நேற்று(ஜன 30) காலமானார்.

ஸ்பெயின் நாட்டைச், சேர்ந்த விவசாயி பிரான்சிஸ்கோ  ‘உலகின் பழமையான மனிதர்’ என்று கருதப்பட்டார்.கடந்த 1904ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி பிறந்த பிரான்சிஸ்கோ, ஸ்பெயின் நாட்டின்  கலைஞரான ‘மார்சென்ஸா’ என்பவரின் முக சாயலை கொண்டதால், கிராமத்து மக்கள் அவரை ‘மார்சென்ஸா’ என்று அழைத்தனர்.

கடந்த 1988ம் ஆண்டு தனது மனைவியை இழந்த அவர்,தன்னுடைய  நிலத்தில் வளர்ந்த காய்கறிகளை  உண்டும், தினமும்  சிவப்பு ஒயின் அருந்தி வந்தார்.ஆலிவ் எண்ணை மற்றும்  பால் கொண்டு தயாரிக்கப்படும் ரொட்டியை தனது காலை உணவாக உண்டு வந்தார். தனது 107வயது வரை, தினமும் காலை நடைப்பயிற்சியை மேற்கொண்டார். தன்னுடைய நீண்ட ஆயுளுக்கு இவை தான் காரணம் என்று கடந்த ஆண்டு பிறந்த நாள் கொண்டாடத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

மேலும் படிக்க