August 26, 2021
தண்டோரா குழு
இந்தியாவின் முன்னணி எண்ட்-டு-எண்ட் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் விநியோகச் சங்கிலி சேவை நிறுவனம் டெல்லிவெரி.பெங்களூரை மையமாக் கொண்ட ஸ்பாட்டன் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் பி2பி திறன்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது டெல்லிவெரி.
இதுகுறித்து, டெல்லிவெரி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாஹில் பாருவா பேசும்போது,
ஒவ்வொரு முன்னேற்றங்களுமே நிறுவனத்தின் வளர்ச்சியை குறிக்கிறது.வணிக வளர்ச்சியைக் கட்டமைக்கும் இலக்குக்கான செயல்பாடுகளாக இவை மேற்கொள்ளப்படுகிறது.கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக டெல்லிவெரி ஆனது பி 2 சி லாஜிஸ்டிக்ஸ் பணியை மேற்கொண்டுவருகிறது.தற்பொழுது, இதில் ஒரு முன்னணி நிலையை நிலைநாட்டியுள்ளது.
மேலும், எங்கள் பகுதி டிரக்லோட் வியாபாரத்தை ஸ்பாட்டனுடன் இணைப்பதன் மூலம் நாங்கள் பி2பி எக்ஸ்பிரஸிலும் முன்னிலை நிலைக்குச் செல்வோம் என்பதில் மாற்றமில்லை. மிக முக்கியமாக, எங்கள் பி2சி மற்றும் பி2பி எக்ஸ்பிரஸ் வணிகங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பு நன்மைகளை டெல்லிவெரி மற்றும் ஸ்பாட்டன் என இரண்டு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கும் வழங்குவதில் நாங்கள் பெருமைக் கொள்கிறோம். மேலும் எண்ட்-டு-எண்ட் சப்ளை சங்கிலித் திறன்களை மேலும் மேம்படுத்துவதில் மகிழ்ச்சிக் கொள்கிறோம் என்றார்.
ஸ்பாட்டன் லாஜிஸ்டிக்ஸ் நிர்வாக இயக்குனர் அபிக் மித்ரா கூறுகையில்,
“டெல்லிவெரியின் வளர்ச்சி மற்றும் மதிப்பு உருவாக்கத்தின் பயணத்தில் ஒரு பகுதியாக நானும், ஸ்பாட்டன் குழுவும் இடம்பெறுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவில் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் விநியோகச் சங்கிலி சேவை நிறுவனமாக ஒரு முன்னணி முடிவை உருவாக்கும் பணியில் டெல்லிவெரி அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஸ்பாட்டன் ஆனது வாடிக்கையாளர்களின் உறவுகள் மற்றும் சேவை தரம், தொழில்முறை மேலாண்மை மற்றும் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்திவருகிறது. அந்த நன்மைகள் தற்பொழுது டெல்லிவெரி நிறுவனத்துடன் பகிரப்படுகிறது. இரண்டு நிறுவனங்களும் இணைவதால் இந்தியாவின் முன்னணி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களில் ஒன்றாக இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை என்றார்.
மேலும் மக்கள், தொழில்நுட்பம், நெட்வொர்க் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் எங்கள் முதலீடுகள் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களின் வணிகத்தை மேம்படுத்துவதில் நாங்கள் தொடர்ந்து முதலீட்டையும் கவனத்தையும் மெற்கொள்வோம். எங்கள் குழுவினர் மற்றும் எங்களின் வணிக பங்காளிகள் ஆகியோருக்கு குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கான வாய்ப்புகளை இந்த ஒருங்கிணைப்பு ஏற்படுத்திக் கொண்டுக்கும் என்றார்.
டெல்லிவெரியின் தலைமை வணிக அதிகாரி சந்தீப் பரசியா மேலும் பேசும்போது,
ஸ்பாட்டன் ஒரு சிறந்த வியாபாரம் என்பதில் சந்தேகமில்லை. இந்நிறுவனத்தை உருவாக்கியிருக்கும் அபிக் மற்றும் அவரின் குழுவினர் அருமையான வேலையைச் செய்துள்ளது. முழு ஸ்பாட்டன் குழுவை டெல்லிவெரிக்கு வரவேற்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நிகழ்வை வருகை பகிரப்பட்ட மதிப்புகள் கொண்ட இரண்டு உயர்தர நிறுவனங்களின் இணைப்பு என எடுத்துக் கொள்ளலாம். எங்கள் ஒருங்கிணைந்த அளவீடு மற்றும் தொழில்நுட்பம் மற்றும் டேட்டாக்களில் அதிக கவனம் செலுத்துவது எங்கள் வாடிக்கையாளர்களுக்கான புதிய தீர்வுகளை உருவாக்கி, சரக்குகளில் புதிய சவால்களை மேற்கொள்ளவும், தொடர் வெற்றிகளைப் பெறவும் வழிவகுக்கும் என்றார்.
சமாரா கேபிடல் மற்றும் Xponentia இணைந்து 2018 இல் IEP இலிருந்து ஸ்பாட்டனை வாங்கியது, பரிவர்த்தனையின் ஒரு பகுதியாக பணத்திற்காக ஒரு முழு வெளியேற்றம் செய்கிறது.கோடக் மஹிந்திரா கேபிடல் நிறுவனத்தின் நிதி ஆலோசகராகவும், ஷர்துல் அமர்சந்த் மங்கள்தாஸ் ரூ கோ ஆனது இந்த பரிவர்த்தனையில் டெல்லிவெரிக்கு சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.