• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்டாலின் முதல்வராக பதவிற்றதை தொடர்ந்து கோவையில் திமுகவினர் கொண்டாட்டம்

May 7, 2021 தண்டோரா குழு

தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றதை தொடர்ந்து,கோவை மேற்கு மாநகர் மாவட்டம்,இடையர் பாளையம் பகுதியில் தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறது சட்டசபை தலைவராக திமுக கட்சி தலைவர் மு க ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டு எளிமையாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வராக இன்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் அவர் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டதை கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக கோவை மேற்கு மாநகர் மாவட்டம், கவுண்டம்பாளையம் பகுதி எட்டாவது வட்டக் கழகம் சார்பாக செயலாளர் வெற்றிவேல் தலைமையில் இடையர்பாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இதில் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக உறவுகள் பின்பற்றி இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் படிக்க