• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்டாலின் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்வதற்காக காரணங்களை தேடி கொண்டிருக்கிறார் – தமிழிசை

June 13, 2018 தண்டோரா குழு

ஸ்டாலின் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்வதற்காக காரணங்களை தேடி கொண்டிருக்கிறார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது எஸ்.வி.சேகர் பற்றி ஸ்டாலின் பேச சபாநாயகர் தொடர்ந்து அனுமதிக்காததால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில்,சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன்,

அரசின் ஆக்கப்பூர்வ திட்டங்களுக்கு எதிர்க்கட்சியான திமுக ஆதரவாக இருக்க வேண்டும். ஆளுங்கட்சிக்குள் கடமை போன்றே எதிர்க்கட்சிக்கும் கடமை உள்ளது.மக்கள் பிரச்னை எவ்வளவோ இருக்கும்போது எஸ்.வி சேகர் கைது செய்யப்பட வேண்டும் என்பதற்காக 89 சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளியேறுவதை ஏற்று கொள்ள முடியாது என்றார்.மேலும், மேலாண்மை ஆணையத்துக்கான உறுப்பினரை,கர்நாடக அரசு நியமிக்காதது குறித்து மு.க.ஸ்டாலின் குரல் எழுப்பாதது ஏன் என்றும் தமிழிசை கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க