• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்கேட்டிங் செய்த படி, கையில் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மாணவி

February 20, 2022 தண்டோரா குழு

கோவையை சேர்ந்த பள்ளி மாணவி, யாசா ,15 கிலோ மீட்டர் தூரம் தொடர்ந்து ஸ்கேட்டிங் செய்த படி, கையில் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த மதன்,மகாலட்சுமி தம்பதியினரின் மகள் யாசா. ஒண்பதாம் வகுப்பு மாணவியான இவர்,மை கராத்தே இண்டர்நேஷனல் மையத்தில், கராத்தே பயிற்சியுடன் சிலம்பம்,ஸ்கேட்டிங் விளையாட்டை முறையாக கற்று வருகிறார்.

இந்நிலையில் கொரோனா விழிப்புணர்வு சாதனையாக மாணவி யாசா பதினைந்து கிலோ மீட்டர் தூரம் தொடர்ந்து ஸ்கேட்டிங் செய்தபடி ஒற்றை சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளார். முன்னதாக இதற்கான துவக்க நிகழ்ச்சி, சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள இயணன் சர்வதேச பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நோபல் உலக சாதனை புத்தகத்தின் பதிப்பாளர் தியாகு நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இதில்,கவுன்சில் ஹெட் ஹரி பிரகாஷ், இயணன் பள்ளி தாளாளர் ஜெயா ஆகியோர் கலந்து கொண்டு சாதனை நிகழ்வை துவக்கி வைத்தனர்.போக்குவரத்து நிறைந்த சாய்பாபா காலனி வீதிகளில் ஸ்கேட்டிங் செய்தபடி சிலம்பம் சுற்றி வலம் வந்த சாதனை மாணவியை தீர்ப்பாளர்கள் அரவிந்த் மற்றும் சிவமுருகன் கண்காணித்தனர்.

மாணவி யாசாவை சாலையில் செல்வோர் கைகளை தட்டி உற்சாகபடுத்தினர்.மாணவியின் இந்த சாதனை நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.தொடர்ந்து அவருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழை தியாகு நாகராஜ் வழங்கினார்.ஏற்கனவே பத்து கிலோ மீட்டர் தூரம் செய்த சாதனை யாசா தனது சாதனையை முறியடித்துள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க