• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்

September 27, 2021 தண்டோரா குழு

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கோவையில் வழக்கறிஞர்கள் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக கோவையில் பல்வேறு பகுதிகளில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் திமுக, இடதுசாரி ஆகிய கட்சிகளை சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். அப்போது, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

மேலும் படிக்க