• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வேலை வாய்ப்புகளை பெறுவதில் தகுந்த கலைஞர்கள் பயனடைவதை அரசு கண்காணிக்க வேண்டும்

November 29, 2021 தண்டோரா குழு

விளையாட்டு வீரர்களுக்கான, 3 சதவீத இட ஒதுக்கீட்டில், சிலம்பம் விளையாட்டை தமிழக அரசு இணைத்துள்ள நிலையில்,இதில் வேலை வாய்ப்புகளை பெறுவதில் தகுந்த கலைஞர்கள் பயனடைவதை அரசு கண்காணிக்க வேண்டும் என கோவையை சேர்ந்த கிராமிய கலைஞர் கேட்டு கொண்டுள்ளார்.

அரசு மற்றும் பொதுத் துறை நிறுவன பணியிடங்களில், விளையாட்டு வீரர்களுக்கான, 3 சதவீத இட ஒதுக்கீட்டில், சிலம்பம் விளையாட்டை சேர்த்து, அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டது. இது பல்வேறு தரப்பினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள போதிலும்,இந்த அறிவிப்பு சரியான பயனாளிகள் பலன் பெற வேண்டும் என கோவையில் நாட்டுப்புற கலகஞர்கள் கோரிக்கக விடுத்துள்ளனர்.

இது குறித்து கோவையில் கிராமிய கலைகளில் பல்வேறு சாதனைகளை செய்தவரும்,நாட்டுப்புற கலைகளை இளம் தலைமுறையினருக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருபவருமான கிராமிய புதல்வன் டாக்டர் கலையரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

அண்மையில், தமிழக அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில், காலியாக உள்ள பணியிடங்களில், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான, 3 சதவீத இட ஒதுக்கீட்டில்,சிலம்பம் விளையாட்டை சேர்த்துள்ளதை தாம் வரவேற்பதாக கூறிய அவர்,அதே நேரத்தில் இந்த அறிவிப்பில் உண்மையான கலைஞர்கள் பயனடையும் வகையில்,தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் அவர்,சிலம்பத்தை இட ஒதுக்கீட்டில் இணைத்தது போல தமிழக பாரம்பரிய கலைகள் அனைத்தையும் இணைக்க முன் வரவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.இந்த சந்திப்பின் போது நாட்டுப்புற மூத்த கலைஞர் அனில்குமார் உடனிருந்தார்.

மேலும் படிக்க