• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வேலையில்லாமல் இருப்பதைவிட பக்கோடா விற்பது சிறந்தது – மாநிலங்களவையில் அமித் ஷா பேச்சு

February 5, 2018 தண்டோரா குழு

வேலையில்லாமல் இருப்பதைவிட பக்கோடா விற்பது சிறந்தது என குஜராத் மாநிலத்திலிருந்து ராஜ்ய சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அமித் ஷா மாநிலங்களவையில் கூறியுள்ளார்.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா குஜராத் மாநிலத்திலிருந்து ராஜ்ய சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்ற பின்னர் தனது முதல் கன்னி பேச்சில் பகோடா சர்ச்சையை அவர் குறிப்பிட்டார்.

அப்போது பேசிய அவர்,

அரசின் திட்டங்கள் குறித்து பெருமையுடன் குறிப்பிட்டார். சிறு,குறு தொழில் கடன்களை பெறுவோர் தொழில் தொடங்கி சிறப்பாக வளர்ச்சி அடைந்து வருகின்றனர். பகோடா விற்பதை கிண்டல் செய்து காங்கிரஸ் கட்சியினர் நடத்தி வரும் போராட்டங்களை விமர்ச்சித்த அவர், வேலை இல்லாமல் இருப்பதற்கு பகோடா விற்பது சிறப்பான பணி எனவும் பக்கோடா விற்பது அவமானமில்லை. வேலையின்மை இப்போது திடீரென உருவாகவில்லை” எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், டீ விற்றவரின் மகன் நாட்டின் பிரதமராகும்போது, பகோடா விற்பவரின் மகன் ஏன் தொழிலதிபராக வரக்கூடாது என்றும் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

டி.வி நிகழ்ச்சி ஒன்றில் வேலையில்லா திண்டாட்டம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி சாலையில் சிலர் பகோடா விற்பதாக கூறி விளக்கமளித்தார். இதனை கிண்டல் செய்யும் வகையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் மோடி செல்லும் இடங்களில் பகோடா செய்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க