• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வேறு மாவட்டத்திற்கு செல்லும் அனைவரும் 14 நாள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுவர் – தமிழக அரசு

May 14, 2020 தண்டோரா குழு

வேறு மாவட்டத்திற்கு செல்லும் அனைவரும் 14 நாள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுவர் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா சோதனை மற்றும் தனிமைப்படுத்துவது குறித்த வழிமுறைகளை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில்,

ஒரு மாவட்டத்திலிருந்து,மற்றொரு மாவட்டத்திற்கு செல்பவர்களில் அறிகுறி இருந்தால் மட்டுமே சோதனை நடத்தப்படும்.மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.அடுத்த மாநிலங்களில் இருந்து வருபவர்கள் அனைவருக்குமே சோதனை செய்யப்படும்.சோதனை உறுதி செய்யப்பட்டால் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து வந்து, உடனடியாக மருத்துவமனை செல்பவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.கர்ப்பிணி பெண்கள், குடும்ப உறுப்பினர்களின் மறைவுக்கு வருபவர்களுக்கும் 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தப்
படுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க