• Download mobile app
18 Oct 2025, SaturdayEdition - 3538
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார் – பிரேமலதா

March 30, 2017 தண்டோரா குழு

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் நலமுடன் இருகிறார், ஏப்ரல் 6-ம் தேதி முதல் வேட்பாளரை ஆதரித்து ஆர்.கே. நகரில் பிரச்சாரம் செய்வார் என்று அக்கட்சியின் மகளிரணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் ஆளும் கட்சி, எதிர்கட்சி என பலரும் வாக்காளர்கள் பணம் கொடுக்கிறார்கள் அதனை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளாமல் இருகிறது என புகார் கூறினார்.

“நம் நாட்டின் முதுகெலும்பே விவசாயிகள்தான். ஆனால் அப்படிப்பட்ட விவசாயிகள் மிக கஷ்டப்பட்டு தில்லியில் இத்தனை நாட்களாக போராடி வருகின்றனர். நதிகள் இணைப்பே விவசாயிகளின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும். அதேபோல் மீனவர்களின் பிரச்னைக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக அமையும்” என்றார் பிரேமலதா.

தேர்தலில் மற்ற கட்சிகள் எல்லாமே பணத்தை நம்பியுள்ளன. ஆனால் தே.மு.தி.க. மக்களை நம்பியிருக்கிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மக்கள் நல்லவர்களை தேர்ந்தெடுப்பார்கள் என நம்புவதாகவும் , தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வருவது நிச்சயம் என அவர் கூறினார்.

மேலும் படிக்க