• Download mobile app
11 Mar 2026, WednesdayEdition - 3682
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வேகத் தடைக்கு பதிலாக 3டி வண்ணப் பூச்சுக்கள் – மத்திய அரசு பரிசீலனை.

April 27, 2016 தண்டோரா குழு.

பொதுவாகச் சாலையில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் வேகத்தடையைப் பார்த்ததும் ப்ரேக் பிடித்து வாகனத்தின் வேகத்தைக் குறைத்து கொள்வார்கள். எனினும் வேகத்தடை பள்ளிகள், சந்தைகள், பொதுமக்கள் அதிகமாகக் கூடும் என முக்கிய இடங்களில் போடப்பட்டிருக்கும். இதனால் விபத்தில் ஏற்படுவதில் இருந்து தவிக்கலாம்.

இருப்பினும் சில அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகளுக்கு சில நேரங்களில் தங்கள் கட்டுப்பாட்டை இழந்து வேகத்தடையால் விபத்துக்கள் ஏற்படுகிறது.

இதனைத் தவிர்க்க 3 டி தொழில்நுட்பம் போன்றே காட்சியளிக்க கூடிய முப்பரிமாண வண்ணப் பூச்சுக்களை முக்கியமான தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டிவிட்டர் வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள நிதின் கட்காரி , முப்பரிமாண வண்ணப் பூச்சுக்களை பயன்படுத்துவதன் மூலம் வேகத்தடை அமைக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் அதன் மூலம் ஏற்படும் விபத்துகளும் தவிர்க்கப்படும் என்றும் அமைச்சர் கட்கரி தெரிவித்தார்.

மேலும், அமெரிக்கா, கனடாவில் இதே போன்ற நடைமுறை அமலில் உள்ள நிலையில் அது இந்தியாவிலும் கொண்டுவரப்பட உள்ளது. எனினும் அரசின் இந்த யோசனை பலன் தராது என்று பலர் கட்கரிக்கு டிவிட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க