• Download mobile app
10 Mar 2026, TuesdayEdition - 3681
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெள்ளை மாளிகையின் பிரதான அதிகாரி அங்கேலா ரீட்பணிநீக்கம்

May 6, 2017 தண்டோரா குழு

வெள்ளை மாளிகையின் பிரதான அதிகாரி அன்ஜலா ரீட் பணிநீக்கம் செய்யப்பட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்க நாட்டின் பிரபலமான ரிட்ஸ் கார்ல்டன் என்னும் 5 நட்சத்திர விடுதியில் பணியாற்றிக்கொண்டிருந்த அன்ஜலா ரீட் கடந்த 2௦11ம் ஆண்டு பிரதான அதிகாரியாக நியமிக்கப்பட்ட முதல் பெண் மற்றும் இரண்டாவது ஆப்ரோ அமெரிக்கர் அன்ஜலா ரீட் ஆவார்.

இவர் வெள்ளைமாளிகையில் உள்ள சுமார் 132 அறைகளில் ஒவ்வொரு நாளும் நடக்கும் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதும், அங்கு பணிபுரியும் ப்ளம்பர்ஸ், பட்லர்கள், சமையல் ஆட்கள், மின் வல்லுநர்கள் உள்ளிட்ட 9௦ ஊழியர்களை மேற்பார்வை செய்யும் பணி அவருடையது.
அதோடு அமெரிக்க அதிபர் குடும்பத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இது குறித்து வெள்ளைமாளிகை செய்திதொடர்பாளர் சாரா ஹக்காபீ சண்டேர்ஸ் கூறுகையில்,

“அன்ஜலா ரீட் பணி நீக்கம் செய்யப்பட்ட செய்தி உண்மையானது. கடந்த 2௦11 ஆம் ஆண்டு வெள்ளைமாளிகையில் பணியமர்த்தப்பட்டார். எதற்காக அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார் என்பதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. அதிகாரிகள் அவரை நல்ல முறையில் வழியனுப்பி வைத்துள்ளனர்.

புதிய அரசு அதிகாரத்திற்கு வரும்போது, அதிகாரிகளை மாற்றுவது வழக்கம். பதவிக்கு வரும் புதிய அதிபர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தாங்கள் விருப்பும் நபரை, பிரதான அதிகாரிகளாக நியமிப்பர். ஒரு வேலை அதற்காக தான் அங்கேலா ரீட்வை பணி நீக்கம் செய்திருக்கலாம்” என்றார்.

மேலும் படிக்க