• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் குப்பைகளுக்கு இடையில் மீதேன் எரிவாயு உருவாகியுள்ளதா? வல்லுநர் குழு ஆய்வு

April 29, 2022 தண்டோரா குழு

கோவை வெள்ளலூர் பேரூராட்சிக்குட்பட்ட செட்டிபாளையம் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான 650 ஏக்கர் பரப்பளவிலான குப்பைக்கிடங்கு உள்ளது. கோவை மாநகரில் உள்ள 100 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த கிடங்கில் கொட்டப்படுகிறது.

அளவுக்கு அதிகமான குப்பைகள் சேகரமாகும் நிலையில் குப்பைகளுக்கு இடையே மீதேன் எரிவாயு உருவாகி அவ்வப்போது தீ விபத்து ஏற்படுகிறது. குப்பைகள் ஒரே பகுதியில் சேகரிக்கப்படுவதால், தீ மளமளவென பரவி, கரும் புகை மூட்டம் ஏற்படுகிறது. இதனால், சுற்றுவட்டாரப்பகுதிகளில் வசிக்கும் சுமார் 50 ஆயிரம் மக்கள் மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு கடும் அவதியடைந்து வருகின்றனர்.

குப்பையை அகற்ற ரூ.60 கோடி செலவில் பயோ-மைனிங் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தினமும் 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 கனமீட்டர் குப்பை தரம் பிரித்து அழிக்கப்படுகிறது.இந்நிலையில், வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் குப்பைகளுக்கு இடையே மீதேன் எரிவாயு உருவாகுவதினால் தீ விபத்து ஏற்படுகிறது. இதனை தடுக்க மாநகராட்சி சார்பாக வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு குப்பைகளுக்கு இடையே மீதேன் எரிவாயு உருவாகியுள்ளதா? என ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மீதேன் எரிவாயு உருவாகும் பட்சத்தில் முன்கூட்டியே அதனை அப்புறப்படுத்த அறிவியல் ரீதியிலான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்,’’ என்றார்.

மேலும் படிக்க