• Download mobile app
15 Jun 2025, SundayEdition - 3413
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

வெள்ளத்தில் சிக்கிய தம்பதி கடும் போராட்டத்துக்கு பின்பு மீட்பு

June 13, 2018 தண்டோரா குழு

கேரள மாநிலம் அட்டப்பாடியில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 5 நாட்களாக தவித்துவந்த தம்பதியனரை நீண்ட போராட்டத்திற்குப் பின் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

தமிழக – கேரள எல்லை பகுதியான அட்டப்பாடி உள்ள சாவடியூர் கிராமத்தின் நடுவே பவானி ஆறு ஓடுகிறது. தென்மேற்கு பருவ மழையில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. அதுவும் கேரளாவில் மழை தீவிரமடைந்த நிலையில் அட்டப்பாடி பகுதியில் பெய்த கனமழையால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பவானி ஆற்றை சுற்றி உள்ள கிராமத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் பவானி ஆற்றைக் கடந்து விவசாய பணிக்குச் சென்ற சுகுணன், வல்சம்மா என்ற முதிய வயது தம்பதி வெள்ளத்தில் எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்டனர். இதையடுத்து ஆற்றைக் கடந்து ஊருக்குள் வரமுடியாமல் கடந்த 5 நாட்களாக வெள்ளத்தின் நடுவே கனமழையில் உணவுயன்றி சிக்கித் தவித்த வந்துள்ளனர்.

இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்ததை யடுத்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கடும் போராட்டத்திற்கு பின்பு அந்த தம்பதி இன்று பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அட்டப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க