கேரள மாநிலம் அட்டப்பாடியில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 5 நாட்களாக தவித்துவந்த தம்பதியனரை நீண்ட போராட்டத்திற்குப் பின் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
தமிழக – கேரள எல்லை பகுதியான அட்டப்பாடி உள்ள சாவடியூர் கிராமத்தின் நடுவே பவானி ஆறு ஓடுகிறது. தென்மேற்கு பருவ மழையில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. அதுவும் கேரளாவில் மழை தீவிரமடைந்த நிலையில் அட்டப்பாடி பகுதியில் பெய்த கனமழையால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பவானி ஆற்றை சுற்றி உள்ள கிராமத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் பவானி ஆற்றைக் கடந்து விவசாய பணிக்குச் சென்ற சுகுணன், வல்சம்மா என்ற முதிய வயது தம்பதி வெள்ளத்தில் எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்டனர். இதையடுத்து ஆற்றைக் கடந்து ஊருக்குள் வரமுடியாமல் கடந்த 5 நாட்களாக வெள்ளத்தின் நடுவே கனமழையில் உணவுயன்றி சிக்கித் தவித்த வந்துள்ளனர்.
இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்ததை யடுத்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கடும் போராட்டத்திற்கு பின்பு அந்த தம்பதி இன்று பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அட்டப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி
வி.ஜி.எம். அறக்கட்டளை மற்றும் கரூர் வைஸ்யா வங்கி இணைந்து அதிநவீன இரத்த வங்கியை தொடங்கியுள்ளது
சுந்தரி கிருஷ்ணகுமார் காலமானார்
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள்
ஸ்கோடா பிராண்ட் இந்தியாவில் நன்கு வலுப்படுத்தி, 2025-ஆம் ஆண்டு ஒரு வளர்ச்சியின் ஆண்டாக உருவாகிவருகிறது
கோவையில் 3 நாட்கள் நடைபெறும் ஆசிய நுண்கலை நகை கண்காட்சி 2025 இன்று துவங்கியது !