• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வெளிநாடுகளில் சென்று மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை அறிவித்த ஷாலோம் எஜுகேஷன்

June 18, 2025 தண்டோரா குழு

கடந்த 15 ஆண்டுகளாக மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களின் கனவை நிறைவேற்றும் விதமாக வெளிநாடுகளில் மருத்துவக்கல்வி பயிலும் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் சேவையை செய்து வருகிறது ஷாலோம் எஜுகேஷன் நிறுவனம்.

தமிழகம் முழுவதும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி என பல்வேறு நேரடியான கிளை அலுவலகங்களுடன் செயல்பட்டு வரும் ஷாலோம் எஜுகேஷன் நிறுவனம் இந்த ஆண்டுக்கான பல்வேறு கல்வி உதவி திட்டங்களை அறிவித்துள்ளது.

இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஷாலோம் எஜுகேஷன் நிறுவன அலுவலகத்தில் நடைபெற்றது.

நிறுவனத்தின் இயக்குனர் அனிதா காமராஜ் பேசுகையில்,

வெளிநாடுகளில் மருத்துவம் பயில செல்ல ஆர்வமுடைய மாணவர்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை எங்களது நிறுவனம் செய்து வருவதாக கூறிய அவர், அரசு புள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கென பிரத்தியேகமாக எவ்வித கட்டணமும் பெறாமல், இந்தியாவில் செலவாகும் அட்மிஷன், விசா, டாக்குமெண்டேஷன், விமான கட்டணம் என சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான சேவையை முற்றிலும் இலவசமாக வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

சுமார் 14 நாடுகளில் மருத்திவ கல்வி பயில்வதற்கான சேவைகளை வழங்கி வருவதாக கூறிய அவர்,வெளிநாடுகளுக்கு சென்று கல்வி பயில்வதற்கான ஏற்பாடுகளை முழுமையான பாதுகாப்பு வசதிகளுடன் ஏற்படுத்தி தருவதாக குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு ஷாலோம் எஜுகேஷன் நிறுவனம் வழியாக வெளிநாட்டில் மருத்துவக்கல்வி (M.B.B.S/ M.D) பயில பதிவு செய்யும் முதல் 125 மாணவர்களில் இரண்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 6 வருடத்திற்கான கல்வி கட்டணத்திலிருந்து 100 சதவீத விலக்கு அளிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் படிக்க