• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வெலிங்டனில் இராணுவ தினம்

January 16, 2017 தண்டோரா குழு

நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவ முகாமில் இராணுவ தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

வீர மரணமடைந்த இராணுவ வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இராணுவப் பயிற்சிக் கல்லூரியின் தலைவர் காடியாக் மற்றும் இராணுவ அதிகாரிகள் போர் நினைவுத் தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

நாடு சுதந்திரம் பெற்ற பின் இராணுவத் தளபதி பொறுப்பை ஆங்கிலேயரான சர் பிரான்ஸிஸ் பச்சரிடமிருந்து இந்தியாவின் தளபதி (மறைந்த ஃபீல்டு மர்ஷல் ) கே.எம். கரியப்பா 1948 ஆம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி ஏற்றார்.

இந்த வரலாற்று நிகழ்வைக் கவுரவிக்கும் விதமாகவும், நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் ஜனவரி 15ம் தேதி இந்தியா இராணுவ தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த தினத்தையொட்டி, வீர மரணமடைந்த இராணுவ வீரர்களுக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் இராணுவ முகாமில் உள்ள போர் நினைவுத் தூணில் இராணுவ பயிற்சி கல்லூரி தலைவர் காடியாக் மற்றும் இராணுவ அதிகாரிகள் திங்கள் கிழமை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இதில் ஏராளமான இராணுவ அதிகாரிகள் சிப்பாய்கள் மற்றும் அவர்களின் குடும்பதினர்கள் கலந்து கொண்டார்கள்.

மேலும் படிக்க