• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வீட்டை உடைத்து அரிசி தேடிய யானை – பொதுமக்கள் அச்சம்

June 16, 2018 தண்டோரா குழு

கோவை மேற்குதொடர்ச்சிமலையில் இருக்கும் ஆனைகட்டி பகுதியிலுள்ள மலைவாழ் கிராமம் கூட்டுப்புலிக்காடு.இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.இவர்கள் விவசாய கூலிகளாகவும்,செங்கல் சூளைக்கும் வேலைக்கு செல்கின்றனர்.வனப்பகுதியை ஒட்டியிருப்பதால் அடிக்கடி யானைகள் ஊருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை நான்கரை மணியளவில் சாலை வழியாக வந்த ஒற்றை யானை வெள்ளியங்கிரி என்பவரது வீட்டை உடைத்து அரிசி இருக்கிறதா என தேடியுள்ளது.யானை வீட்டின் மேல்கூரையை உடைத்துள்ளதால் வீட்டினுள் இருந்தவர்கள் உள் அறைக்குள் சென்றதால் உயிர் பிழைத்தனர்.தற்போது காடுகளில் நல்ல மழை பெய்து யானைக்கு தேவையான உணவுகள் கிடைத்த போதும் அரிசியை தேடி வந்துள்ளது மலைவாழ் மக்களிடம் மிகுந்த பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க