• Download mobile app
03 May 2025, SaturdayEdition - 3370
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விவசாய நிலங்களில் வரப்புகளை உயர்த்த தமிழக அரசு திட்டம் கொண்டு வர கோரிக்கை

March 15, 2022 தண்டோரா குழு

விவசாய நிலங்களில் உள்ள வரப்புகளை உயர்த்த தமிழக அரசு திட்டம் கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் சில ஆண்டுகளாக வேளாண்மை தொழில்நுட்ப பிரிவு மூலமாக வழங்கப்பட்டு வந்த விவசாய பொருட்களான மண்வெட்டி, தார்பாய், கொத்து போன்றவைகள் இலவசமாக மற்றும் மானிய விலையில் வழங்கப்படாமல் இருந்து வந்தது. இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோவை மாவட்டம் சார்பாக விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் தொடர்ந்து விவசாயிகளுக்கு இந்த பொருட்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதனிடையே தற்போது தமிழக அரசு சார்பாக விவசாயிகளுக்கு இந்த விவசாய பொருட்கள் மானிய விலையில் எந்த தடையும் இன்றி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிக்கு விவசாயிகள் சங்கம் சார்பாக நன்றி.மேலும் மாநில அரசு சார்பாக விவசாய நிலங்களில் வரப்புகளை உயர்த்துதல் தொடர்பாக திட்டம் கொண்டு வரப்பட வேண்டும். இதனை மாநில அரசு மூலமாகவே நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க