April 5, 2018
தண்டோரா குழு
ஆக்ராவில் தொழிலதிபர் ஒருவர் விருது கிடைத்த சந்தோஷத்தில் மேடையில் நடனமாடிய போது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்ராவில் டிராவல் ஏஜண்ட் என்ற விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்களுக்கு விருது வழங்கப்பட்டது. இவ்விழாவில் விஷ்ணுபாண்டே (53) என்ற தொழிலதிபருக்கு விருது வழங்கப்பட்டது.இவரது பெயரை அறிவித்தவுடன், சந்தோஷத்தின் உச்சத்திற்கு சென்ற அவர் எழுந்து சென்று அனைவரது முன்னிலையிலும் மேடையில் நடனமாடியுள்ளார்.
இந்நிலையில், நடனமாடிக்கொண்டிருந்த விஷ்ணுபாண்டே திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.விருது வாங்கிய சந்தோஷத்தில் தொழிலதிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.