சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் கடத்தி வரப்பட்ட 4 கிலோ தங்கம் உட்பட 3.08 கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட பொருட்களை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் செய்துள்ளனர்.
கோவை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த 14ம் தேதி வழக்கம் போல் சோதனை நடத்தினர். அப்போது சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்த 6 பேர் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்து அவர்களின் உடமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அதில் உடமைகளை மறைத்து கொண்டு வரப்பட்ட 1.92 மதிப்பிலான 3985 கிராம் தங்கம் மற்றும் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டு எலக்ட்ரானிக் பொருட்கள் என 1.16 மதிப்பிலான பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பரிந்துரை செய்யப்பட்ட மொத்த தங்கம் மற்றும் பொருட்களின் சந்தைமதிப்பு 3.08 கோடி இருக்கலாம் எனக் கூறியுள்ள மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 6 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது