• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விமானப்படை பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை: அதிகாரி சிறையில் அடைப்பு

September 26, 2021 தண்டோரா குழு

கோவையில் இந்திய விமான படை பயிற்சி கல்லூரியில் பெண் விமானப்படை அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் சக அதிகாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த 30 பேர் பயிற்சிக்காக வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி தன்னை சக அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் விமானப்படை பயிற்சி கல்லூரி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

இப்புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க தாமதம் ஆகி வந்ததால், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கோவை காவல் துறையிடம் கொடுத்த புகாரின் பேரில் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந் நிலையில் கோவை விமான படை கல்லூரியில் பயிற்சியில் இருந்த லெப்டினல் அமிர்தேஷ் என்ற விமானப்படை அதிகாரியை கோவை காவல் துறையினர் கைது செய்து
நேற்று இரவு அதிகாரி லெப்டினல் அமிர்தேஷ் , நீதிபதி இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டு ஆஜர் செய்யப்பட்டார்.

விமான படை அதிகாரி மீது கோவை காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க முடியாது என அமிர்தேஷ் தரப்பு வழக்கறிஞர் அபிடவிட் தாக்கல் செய்தார். கோவை காவல் துறை பதில் அபிடவிட் தாக்கல் செய்ய அவகாசம் கேட்ட நிலையில், விமானபடை அதிகாரி லெப்டினல் அமிர்தேஷை ஒரு நாள் மட்டும் ரிமாண்ட் செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனையடுத்து லெப்டினல் அமிர்தேஷை உடுமலை கிளை சிறையில் போலீசார் அடைத்தனர். மேலும் காவல்துறையினர் கூறும்போது லெப்டினல் அமிதேஷ் மீது 376 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாளை நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கின் தன்மை இருக்கும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க