• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விமானத்திலிருந்து வீசப்பட்ட உடல் ; மருத்துவமனை மாடியில் விழுந்தது

April 13, 2017 indiatimes.com

விமானத்திலிருந்து தூக்கி எறியப்பட்ட ஒருவரது உடல் மெக்ஸிகோவில் உள்ள தனியார் மருத்துவமனையின் மாடியில் விழுந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மெக்ஸிகோ நகரத்தின் பொது சுகாதார சேவை அதிகாரி கூறுகையில், “மெக்ஸிகோ அருகே உள்ள வடசினலோவ மாநிலத்தில் ஐ.எம்.எஸ்.எஸ். மருத்துவமனை அமைந்துள்ளது. விமானத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட ஒருவரத்து உடல் அந்த மருத்துவமனையின் மாடியில் புதன்கிழமை(ஏப்ரல் 12) காலை 7.3௦ மணியளவில் விழுந்தது.

சினலோவ மாநிலத்தின் தலைநகரான கிலியாக்கன் நகரிலிருந்து 6௦ கிலோமீட்டர் தூரத்திலுள்ள நகரில் மேலும் 2 பேரது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மருத்துவமனையின் மாடியில் விழுந்த உடலை தூக்கி எறிந்த அதே விமானத்திலிருந்து தான் இந்த இரண்டு உடலும் தூக்கி எறியப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.

விமானத்திலிருந்து தூக்கி எறிந்தபோது அவர்கள் உயிருடன் இருந்தனரா? என்று தெரியவில்லை. மாநில வழக்கறிஞர் அலுவலக அதிகாரிகள் சம்பவ இடத்தில் கூடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.” என்றார்.

சினலோவ மாநிலத்தின் துணை அட்டார்னி ஜெனரல், ஜீசஸ் மார்டின் கூறுகையில், “மருத்துவமனையின் மாடியில் விழுந்த உடலில் காயங்கள் இருந்தன. ஆனால் அந்த காயங்கள் விமானத்திலிருந்து தூக்கி வீசியதால் ஏற்பட்டது என்று உறுதியாக சொல்லமுடியாது. மேலும் எல்டோடார்டோ நகரம் போதை மருந்து கடத்தல்கார்களுக்கு பெயர் போன இடமாகும்” என்றார்.

மேலும் படிக்க