• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தனது பாதுகாப்பு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

February 5, 2020

போடி பாளையம் அருகே நேற்று இரவு வேகமாக வந்த இரு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியது.

விபத்தில் போடிபாளையத்தை சேர்ந்த பூபால் என்பவரும், பச்சபாளையத்தை சேர்ந்த தங்கவேலு என்பவரும் பாதிக்கப்பட்டனர். அப்போது அந்த வழியாக போடிபாளையத்திலிருந்து மதுக்கரை வந்து கொண்டிருந்த நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விபத்து நடந்த இடத்தில் தனது காரை நிறுத்துமாறு உத்தரவிட்டார்.

மேலும் விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு தனது பாதுகாப்பு வாகனத்தில் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உடனடி சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் படிக்க