• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் – காடேஸ்வரா சுப்பிரமணியம்

August 31, 2021 தண்டோரா குழு

விநாயகர் சதுர்த்தி விழாவை தடை செய்கின்ற இந்து விரோத போக்கை கண்டித்து வருகின்றன 2 ஆம் தேதி தமிழகத்திலுள்ள அனைத்து கோவில்களிலும் மக்கள் இறைவனிடம் முறையிட போவதாக காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

கோவை ராம் நகர் பகுதியில் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

தமிழகத்தில் மிக விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகின்ற விநாயகர் சதுர்த்தி மக்கள் விழாவை தமிழக அரசு தடை செய்திருப்பது கண்டனத்துக்குரியது. கொரோனா காரணம் என்று அரசு கூறியிருப்பது திட்டமிட்ட சதி.கடந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகமாக இருந்த போது கூட இந்து முன்னணி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து சிறப்பான முறையிலே மக்களுடன் கொண்டாடியது.

அதன் காரணமாக எவ்வித தொற்றுப் பரவலும் உண்டாகவில்லை.விநாயகர் சதுர்த்தி விழாவை தடை செய்கின்ற இந்து விரோத போக்கை கண்டித்து வருகின்றன 2ஆம் தேதி வியாழக்கிழமை தமிழகத்திலுள்ள அனைத்து கோவில்களிலும் மக்கள் இறைவனிடம் முறையிட்டு வேண்டுதல் செலுத்துவார்கள். இந்த அரசு உடனடியாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொண்டு சமூக இடைவெளியுடன் மக்கள் விழாவைக் கொண்டாடுவதற்கு வழிவகை செய்ய வேண்டும்,இல்லையென்றால் மிக பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது உடன் மாநில செயலாளர் J.S.கிஷோர் குமார், கோவை கோட்ட செயலாளர் S.சதீஷ், மாவட்ட தலைவர் K.தசரதன், மாவட்ட செய்தி தொடர்பாளர் C.தனபால் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க