தமிழகம் எங்கும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.கோவை வடக்கு திமுக மாவட்ட செயலாளர் தெ.அ.ரவி அவர்களின் வழிகாட்டுதல் படி கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு 100 கோவில்களில் அன்னதானம் வழங்குவது என சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் ஆரோக்கிய ஜான் கூறினார்.
அதனை தொடர்ந்து பல்வேறு கோவில்களில் அன்னதானம் வழங்கி வருகின்றார்.அதனை தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் சர்க்கார் சாமகுளம் பேரூராட்சி குரும்பபாளையம் வையாபுரி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி கணபதி விநாயகர் திருக்கோயில் பக்தர்களுக்கு சுமார் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு வடக்கு மாவட்ட சிறுபான்மை அணி வடக்கு மாவட்ட தலைவர் ஆரோக்கிய ஜான் அன்னதானம் வழங்கினார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
தமிழின தலைவர்,திமுக தலைவர் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு,100 கோவில்களுக்கு கோவை வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மை அணி சார்பில் அன்னதானம் வழங்க திட்டமிட பட்டது. கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ.அ.ரவி அவர்களின் வழிகாட்டுதல் படி கோவை வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கோவில்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றோம்.
இதன் தொடர்ச்சியாக விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு இன்று எஸ்.எஸ்
குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வையாபுரி நகரில் உள்ள சக்தி கணபதி விநாயகர் திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. என் கூறினார்.
கோவை புரோஜோன் மால் 8-வது ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம் -அனைத்து பிராண்டுகளிலும் சிறப்பு தள்ளுபடி அறிவிப்பு
172 நகரங்களில் 300 வாடிக்கையாளர் தொடர்பு மையங்களுடன் புதிய மைல்கல்லை ஸ்கோடா ஆட்டோ இந்தியா எட்டியுள்ளது
பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஏழு பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை – கோவை போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
டொயோட்டா 5வது தலைமுறை ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் புத்தம் புதிய கேம்ரி ஹைப்ரிட்டின் அனுபவமிக்க வாடிக்கையாளர் பயணத்தை ஏற்பாடு செய்தது
கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவர் மன்றம் துவக்க விழா
கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் கோவையில் கிராப்ட் பஜார் 2025 துவக்கம்