• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

விஜயபாஸ்கரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் – மு.க ஸ்டாலின்

April 8, 2017 தண்டோரா குழு

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும் என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. செயல்தலைவருமான மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சனிக்கிழமை கூறியிருப்பதாவது; “தற்போது நடைபெற்று வரும் ஆளும் கட்சி ஆட்சியில் தமிழகம் மிகப்பெரிய தலைகுனிவை சந்தித்து வருகிறது என்பதற்கு இந்த வருமான வரித்துறை சோதனைகள் சாட்சியாக அமைந்துள்ளன.

இதற்கு முன்பு நடைபெற்ற சோதனைகள் பற்றி உரிய விளக்கத்தை மத்திய அரசு நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளான அமைச்சரின் வீட்டிற்கு மற்ற அமைச்சர்கள் சென்று ஆதரவு தெரிவிப்பதும் வருமான வரித்துறை அதிகாரிகளுடன் பிரச்னை செய்வதும் கடும் கண்டனத்திற்குரியது.

வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளான அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக தமிழக முதலமைச்சர் எடபாடி பழனிசாமி பதவி நீக்கம் செய்யவேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்யவேண்டும்.

ஊழலுக்கு துணை போன அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து அ.தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் சாம்ராஜ்ஜியத்திற்கு முடிவு கட்டும் வகையில் வருமான வரித்துறை தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும்.”

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் படிக்க